காற்றை வசப்படுத்திய வில்லியம் கம்க்வம்பா
14 வயதில், வறுமையும் பஞ்சமும் பீடிக்கப்பட்ட நிலையில், மலாவியச் சிறுவன் ஒருவன் காற்றாலை ஒன்றை நிறுவினான், தன் இல்லத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக. தற்போது வளர்ந்து, 22 வயது வாலிபராகி நிற்கும் வில்லியம் கம்க்வம்பா, TEDல் இரண்டாம் முறையாக பேசுகையில் தன் வாழ்க்கையையே மாற்றிய அந்தக் கண்டுபிடிப்பு பற்றி தானே சுவைபடச் சொல்கிறார்.
