200 மில்லயன் ஆண்டுகளுக்கு முன்பு நமது பாலூட்டி முன்னோர்கள் மூளையில் ஒரு புதிய அம்சம் தோன்ற காரணமாக இருந்தனர் அது தான் புதிய புறணி .தபால் வில்லை அளவே உள்ள இந்த திசு (வாதுமை கொட்டை அளவே உள்ள மூளையை சுற்றி அமைந்திருக்கும் ) தான் இன்று மனித குலம் அடைந்திருக்கும் வளர்ச்சிக்கு மூல காரணி .எதிர்கால கணிப்பாளர் ரே கர்ச்வீல் மூளையின் திறன் குறித்து வரும் காலங்களில் ஏற்படபோகும் மிக பெரிய எழுச்சிக்கு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். மேக கணினியின் திறனை நமது மூளை நேரடியாக பயன்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று சொல்கிறார்.

