ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்பான உலக உணவுத் திட்ட நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளராகிய ஜோசெட் ஷீரன், இங்கு பசி - பட்டினி பிரச்னை குறித்தும், உலகில் ஏன் போதுமான அளவு உணவு விளைச்சல் இருந்தாலும் பட்டினிச் சாவுகள் தொடரும் அவல நிலை இன்னும் இருக்கிறது என்பது குறித்தும், உணவுக்காக இன்னும் போர்கள் நடைபெறுவது குறித்தும் உரையாற்றுகிறார். அவரது கனவு, உணவுப் பிரச்சனையைத் தனி மனித அளவிலும் தனி தேசங்களுக்குள்ளும் தீர்க்க முயலாமல், உலகமே இணைந்து செயல்பட்டுத் தீர்க்க வேண்டும் என்பதாகும்.

